அதிகாலையில் 6 பேரின் உயிரை பறித்த டிப்பர் லாரி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடில், டிப்பர் லாரி ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்ததாவது:- "8 பேர் படு காயங்களுடன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம். போலீசார் உடலை கைப்பற்றி அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->