கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எங்குத் தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  

இதனால், மக்கள் வெளியில் வர முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், மகாராஷ்டிராவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டெல்லி, தெலுங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், தெலுங்கானா மாநிலத்தில் நேற்றும், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college holiday for heavy rain in mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->