சல்மான் கானுக்கு ''ஒய் பிளஸ்'' பிரிவு பாதுகாப்பு: தீவிர விசாரணையில் 15 குழுக்கள்.!
Salman Khan Y Plus security
மும்பை, பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.
மும்பை, பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சல்மான் கானுக்கு ''ஒய் பிளஸ்'' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது சல்மான் கான் வீட்டிற்குள் இருந்ததாகவும் இதில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 15 குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
English Summary
Salman Khan Y Plus security