சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு.. கோயில் நடை அடைப்பு.!
Sabarimalai Ayyappan temple closed
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டும். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தாண்டு மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதையடுத்து, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு விழா நேற்று இரவோடு முடிவடைந்தது. இதனையடுத்து இன்று காலை 7 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டுள்ளது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் பிப்ரவரி 12-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.
English Summary
Sabarimalai Ayyappan temple closed