தந்தை, மகள் உயிரை பறித்த ஹீட்டர்: போலீசார் விசாரணை!
Rajasthan father and daughter killed Police investigation
ராஜஸ்தானில் வீட்டில் இருந்த ஹீட்டர் தீ பற்றி எரிந்ததில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான், திஜாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் தீபக். இவரது வீட்டில் இருந்த ஹீட்டர் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
உடனே தீ படுக்கையறை முழுவதும் பரவி மெத்தை ஏறிய தொடக்கியதால் உறங்கிக் கொண்டிருந்த தீபக், அவரது மனைவி, மகள் ஆகியோர் தீயில் சிக்கிக்கொண்டு கத்தி கூச்சலிட்டனர்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கிக் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்து மருத்துவர் தீபக் மற்றும் அவரது 3 மாத மகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது மனைவி தீகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இருப்பினும் அவரது நிலைமை கவலைகிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rajasthan father and daughter killed Police investigation