மணிப்பூர் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 7பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பிராந்திய ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi speech about Manipur landslide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->