மத்திய அரசின் செயல்பாட்டை தவறு என நிரூபித்த பெண்... பாராட்டு தெரிவித்த ராகுல் காந்தி.!!
ragul Gandhi twit about women respect
இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு தலைமை பதவி வழங்குவது தொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவினை மேற்கோள்காட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான ட்விட்டர் பதிவில், இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு தலைமை பதவி வகிப்பது, நிரந்தர பணி வகிப்பது தொடர்பாக மத்திய அரசு அவர்களை தகுதியற்றவர்கள் என்று கூறி வாதம் செய்தது.
இதன்மூலமாக ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கூற விழைகிறது. இதனால் மத்திய அரசு பெண்களுக்கு அவமரியாதை செய்துள்ளது. மத்திய அரசின் செயல்பட எதிர்த்து நின்று கண்டிப்பு தெரிவித்த பெண்ணை நான் உளமார பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
ragul Gandhi twit about women respect