புதுச்சேரி || மாணவர்களுக்கு பள்ளி பேருந்துகளை இயக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தின் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:- 

"புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் மூலம் பள்ளிகளுக்கு மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும் அல்லது அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் புதுவையைச் சேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரித்து முட்டையுடன் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று பள்ளிகள் தொடங்கி ஆறு மாத காலம் ஆகியும் இன்று வரை மாணவர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் நகர்ப்புற பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவ - மாணவிகளில் பெரும்பாலானோர் தினமும் ரூ.100 செலவு செய்து பள்ளிக்கு வருகின்றனர். இது தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் அவர்களது கல்வித்திறனை பாதிக்கும். 

இந்நிலையில், இந்த முறை எந்தவிதமான காரணமும் தெரிவிக்காமல், வருகிற 14-ந் தேதி குழந்தைகள் தினமான அன்று முதல் மாணவர்களுக்கு பேருந்துகளை இயக்க கல்வித்துறை உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

அதேபோன்று, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி சீருடை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery opposite political partiy mla siva report


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->