புதுச்சேரி | நிச்சயம் செய்த திருமணம் நிறுத்தம்! இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
Puducherry marriage stopped young man taken decision parents shocked
புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் விரக்தியடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 28). இவர் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்கள் ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்து திருமண நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென திருமணம் நின்று போனதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பாஸ்கரனுக்கு பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இருப்பினும், திருமணம் நின்று போனதால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ள நேற்றிரவு கண்டமங்கலம் சின்ன பாபு சமுத்திரம் அருகே கெண்டியான்குப்பம் ரயில்வே நிலையத்திற்கு பாஸ்கரன் சென்றுள்ளார்.
இந்நிலையில் புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாஸ்கரன் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டால் உயிருக்கு போராடி உள்ளார்.
அதனைப் பார்த்த ரயில்என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு பாஸ்கரனை மீட்டு கண்டமங்கலம் ரயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் 108 அவசர ஊர்தி மூலம் பாஸ்கரனை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கரன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து விழுப்புரம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Puducherry marriage stopped young man taken decision parents shocked