போலி ஆவணம் பயன்படுத்தி குடியுரிமை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Puducherry fake documents with citizenship
விழுப்புரம், கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு புதுச்சேரி பிரஞ்சு தூதராகத்தில் போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற சிலர் முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர் போலி ஆவணம் மூலம் பிரஞ்சு குடியுரிமை பெற்றது தெரியவந்தது.
இதனை அடுத்து போலி ஆவணங்களை தயாரிக்க சாரங்கபாணி என்பவர் உடமையாக இருந்ததுவும் தெரியவந்துள்ளது.
பின்னர் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் போலி ஆவணங்கள் மூலம் பிரஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தவர்களுக்கு சிறை தண்டனை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Puducherry fake documents with citizenship