தபால் ஓட்டு: வாக்களிப்பதற்கான வயது வரம்பு உயர்வு.!
Postal vote age limit raised
இந்திய தேர்தல் ஆணையம், சட்டமன்ற தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடும் வசதியை வழங்கியுள்ளது.
இதன் மூலம் வயதானவர்கள் தங்களது வாக்கினை வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பை மத்திய அரசு 85 உயர்த்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 98 சதவீத வாக்காளர்கள் வாக்கு பதிவு மையங்களில் வாக்களித்திருந்தனர்.
தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் 2-3சதவீதம் பேர் மட்டுமே தபால் ஓட்டு பயன்படுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Postal vote age limit raised