ஒடும் ரயிலில் இருந்து இயங்க முயன்ற பெண்.. தண்டவாளத்தில் விழுந்தவரை விரைந்து காப்பாற்றிய காவலர்..!
Police rescue the woman
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் கீழே விழ முயன்றவரை காவலர் காப்பாற்றிய சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் ரயில் நிலையத்தில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் ரயில் மாறி ஏறியுள்ளார். இதனை அறிந்த அந்த பெண் இரு மகள்களையும் பிளாட்பாரத்தில் வீசி விட்டு இறங்க முயன்றார்.
அதில், நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்துள்ளார். இதனை கண்ட ரயில்வே காவலர்கள் துரிதமாக செயல்ப்பட்டு அவரை மீட்டார். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது.இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.