அதிர்ச்சி - செம்மரம் கடத்தலை தடுத்த காவலர் கார் ஏற்றி படுகொலை.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள அன்னமய்யா மாவட்டம் கே.வி பள்ளி அருகே செம்மர கடத்தல் தடுத்தலை‌ தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் கணேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட காவலர் கணேஷ் பலத்தக் காயமடைந்தார்.

உடனே அவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி காவலரை கொன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏழு செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police murder in andira for stop Sheep smuggling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->