இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை... மகாராஷ்டிராவில் நடந்த அவலம்..!
Police arrested brothers
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை வில்லே பகுதியில் அனில் சோகான் மற்றும் அவரது சகோதரர் நிலேஷ் ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த சகோதரர்கள் அந்தப் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் இந்த வீடியோவை இணையதளத்தில் பரவி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன அந்த பெண் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை அவர்களின் தொல்லை அதிகரித்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத அந்த பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவான சகோதரர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.