மோசமான வானிலை காரணமாக தரையிறங்கிய விமானம் விபத்து.. பயணிகள் காயம்.! - Seithipunal
Seithipunal


மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து துர்காபூருக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமான விபத்து குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்ததாவது "மும்பையில் இருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737 விமானம் நேற்று தரையிறங்கும் போது மோசமான வானிலையை எதிர்கொண்ட நிலையில் விபத்து ஏற்பட்டது. இதில் துரதிஷ்டவசமாக ஒரு சில பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. துர்காபூர் வந்தடைந்தவுடன் உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது" என்று கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plane crashes due to bad weather


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->