பாயிண்டுகளை அடுக்கிய பாலு! "ஷேம், ஷேம்" கோரஸ் பாடிய தயாநிதிமாறன்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடந்து வருகிறது.

இந்த வடிவத்தில் கலந்துக்கொண்ட திமுக எம்.பி. டி.ஆர்,பாலு பேசியதாவது, "நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது.

இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒவ்வோருவருக்கும் ரூ.15 வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை" என்று, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.

டிஆர் பாலு பேசி கொண்டு இருக்கும்போது, பக்கத்தில் அமர்ந்திருந்த தயாநிதிமாறன், ஷேம், ஷேம் என்று முழங்கி கொண்டே இருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament LokSabha TR Balu and Dhayanithi maaran MP


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->