பங்குனி மாத மண்டல பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.!
Panguni month mandala pooja Ayyappan temple opened
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு மார்ச் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும், வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
English Summary
Panguni month mandala pooja Ayyappan temple opened