நான் யாரு தெரியுமா?.. என்னை எப்படியெல்லாம் செய்தார்கள் தெரியுமா?.. கண்ணீரில் நித்தி.. துடைத்துவிடும் சீடர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது.

nithyanandha, nithyanandha kailaasaa,

இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும்., தினமும் வீடியோ காட்சிகள் மூலமாக அனைவருக்கும் தாம் நலமாக இருப்பதாக தெரிவித்து செல்லும் நித்தி., சிங்கிள்ஸ்களுக்கு யோசனையையும்., தனக்கு திறமை இருக்கிறது.. என்னால் இயல்கிறது.. நான் வைத்துக்கொள்கிறேன்.. உன்னால் இயன்றால் நீ வைத்துக்கொள் என்று பகிரங்க வீடியோ காட்சிகள் வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில்., இந்திய அரசிற்கு எதிராகவும் பேசிக்கொண்டு வந்தார். 

nithyanandha, nithyanandha kailaasaa,

இதனைத்தொடர்ந்து தற்போது தனது நாட்டினை ஐநா அதிகாரபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில்., இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும்., இந்தியாவில் உள்ள பாஜக., ஆர்.எஸ்.எஸ் கட்சி., விஸ்வ இந்து பர்சத் போன்ற அமைப்பினர் இதற்கு மறைமுக தூண்டுதலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

ஓரினசேக்கைக்காக நான் குரல் கொடுத்து வரும் நிலையில்., என்னை அனைத்து இந்து அமைப்புகளும் எதிர்த்து வருகிறது. எனக்கு பாலின சோதனை நடத்தினர். நான் ஆணும் அல்ல.. பெண்ணும் அல்ல.. 11 பாலின உயிரினங்களின் கலவையாவேன். என்னை துறவி என்றும் பாராது பாலின சோதனைக்கு உள்ளாக்கி கொடுமை படுத்தினர் என்று தெரிவித்துள்ளார். இதனால் என்னுடைய நாட்டில் இருந்து வெளியேறி இந்நாட்டில் இருப்பதாகவும்., இதனை அதிகாரபூர்மாவாக அறிவிக்க வேண்டும் என்று ஐநாவிடம் கோரிக்கை மனு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyananda feeling sad and got angry new video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->