ராஜஸ்தானில் சோகம் - நீட் பயிற்சி மாணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஜே.இ.இ நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

அப்படி பயிற்சி பெரும் மாணவர்களில் சிலர், சமீப காலமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையிது என்ற மாணவர், கோட்டாவில் உள்ள ஜவகர் நகர் பகுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். 

இவர இன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக மாணவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet student sucide in rajasthan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->