தெலுங்கானா : சினிமாவையே தோற்கடித்த சம்பவம் - ஒரே நேரத்தில் இரண்டு காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டம் சார்லா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மதிவி முத்தையா-ராமலட்சுமி தம்பதியினர். இவர்கள் மகன் சத்திபாபு. இவர் ஸ்வர்ணகுமாரி என்ற பெண்ணை பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார். 

அந்த காதல் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, சக்திபாபு குர்னப்பள்ளியைச் சேர்ந்த சுனிதாவையும் காதலித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சக்திபாபு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இரண்டு காதலியையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அதன் பின்னர் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இதையடுத்து மூன்று குடும்பத்தில் உள்ள பெற்றோர்களும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அகிதற்கான வேலையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணத்திற்காக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூகவலைதளத்தில் தீயாக பரவின. இதனால், மூன்று குடும்பத்தாரும் கவலையில் மூழ்கினர். இந்த திருமணத்தை யாராவது தடுத்து நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அனைவரும் அவசர அவசரமாக வியாழன் கிழமை நடைபெறுவதாக இருந்த திருமணத்தை, புதன் கிழமை இரவே நடத்தி முடித்துள்ளனர். 

இதற்கிடையே வலைத்தளங்களில் வைரலான புகைப்படங்களை வைத்து பெரிய ப்ரேக்கிங் செய்தி கிடைக்கும் என்கிற ஆசையில் முஹூர்த்த நேரத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana man get married two girl firends at same time


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->