கர்நாடகா : மங்களூரில் கஞ்சா பயன்படுத்தியதாக மருத்துவர் உள்பட ஒன்பது பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் கடந்த 12-ந்தேதி கஞ்சா பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்ததாக கூறி இரண்டு மருத்துவர்கள், ஆறு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு கஞ்சா வியாபாரி என்று மொத்தம் ஒன்பது பேரை மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இது தொடர்பாக, மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-  "மங்களூரு நகரில் சமீப காலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தற்போது, கஞ்ச பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மேலும் ஒன்பது பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நான்கு பேர் மருத்துவர் என்பது தெரியவந்தது.

மீதமுள்ளவர்களில் நான்கு பேர் கே.எம்.சி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்து வரும் மாணவர்கள் என்பதும், மேலும், ஒருவர் கஞ்ச வியாபாரி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga nine peoples arrested for drugs use and sale case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->