மருத்துவமனையில் குளித்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்.!
near andira youth arrested for vedio shoot on woman both in hospital
ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியாலா மாவட்டத்தில் ஆத்ம குருநல்வகல்வா பகுதியை சேர்ந்தவர் அலியா. இவர் தனது உறவினரைப் பார்ப்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு உதவியாக இளம்பெண் ஒருவர் இருந்துள்ளார். இவர் மருத்துவமனையில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டுள்ளார்.
இதை அறிந்த அலியா குளியல் அறையின் சுவற்றில் ஏறி இளம்பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு மருத்துவமனையில் உள்ளவர்கள் ஓடி வந்து இளம்பெண்ணிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த இளம்பெண் தான் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்ததாக தெரிவித்தார். இதை கேட்ட உடனே அவர்கள் அங்கிருந்த அலியாவை பிடித்து சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து அந்த வீடியோவை அழித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அலியாவை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அலியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near andira youth arrested for vedio shoot on woman both in hospital