தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் - குஜராத்தில் கோர சம்பவம்.!
mysterious boys attack foreign students in gujarat
குஜராத் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் சனிக்கிழமை இரவு ரம்ஜான் பண்டிகை என்பதால் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் திடீரென அங்கு வந்து மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதம் தொடர்பான முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றவே அடையாளம் தெரியாத கும்பல் மாணவர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதலை காவல்துறையினரும் தங்களது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளனர்.
அதில், “குஜராத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத நபர்களால் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிலர் விடுதியின் மீது கற்களை வீசி கோஷம் எழுப்புவதையும் காண முடிகிறது.
English Summary
mysterious boys attack foreign students in gujarat