மும்பை போலீசாருக்கு வந்த இ-மெயில்: பிரதமர் மோடிக்கு ஸ்கெச் போட்ட மர்ம நபர்கள்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில ஆட்டங்கள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் மும்பை போலீசாருக்கு இ-மெயிலில் ஒரு மிரட்டல் செய்தி வந்துள்ளது. அதில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு ரூ. 500 கோடி கொடுக்க வேண்டும். 

அப்படி கொடுக்கவில்லை என்றால் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் அந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயி தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மிரட்டலை அவரது ஆட்கள் தான் இ -மெயிலில் அனுப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

மேலும் இந்த கடிதம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai police email bomb attack pm modi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->