பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் உரை.. ஐநா சபையில் ஒலிபரப்ப ஏற்பாடு..!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத்தின் 100வது உரை நாளை (ஏப்ரல்-30) இந்தியா முழுவதும் ஒலிபரப்பப்பட உள்ளது. இந்த நிலையில் ஐநா சபை தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படும் என இந்தியாவுக்கான நிரந்தர தூதுக்குழு தகவலை பகிர்ந்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்திலும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பிரதமர் மோடியின் உரை ஒலிபரப்பாகும். ஐநாவின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வாக அமைய உள்ளது. அதேபோன்று நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரத்திலும் மன் கி பாத்தின் 100வது எபிசோட் ஒலிபரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi 100th Mann Ki Baat Speech broadcasting at UN


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->