மணமேடையிலேயே மாப்பிள்ளை செய்த காரியம்.! மாலையை கழட்டிவிட்டு மணமகள் ஓட்டம்.!
marriage girl shock and stopped the marriage
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. திருமண நேரத்தில் கோலாகலமாக விழாவானது உற்சாகத்துடன் நடந்துகொண்டு இருந்தது. அப்போது பாடல் ஒன்றுக்கு மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடியிருக்கின்றார்.
இதை கண்டு கோபமடைந்த மாப்பிள்ளை கடும் கோபத்தில் தனக்கு அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்திருக்கிறார். இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார் மணமகள். இவரை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது அவருடைய தங்கையையே இப்படி அடிக்கிறார்.?
திருமணத்திற்கு பின்னர் என்னையும் இப்படித்தானே அடிப்பார்? பெண்களை மதிக்கத் தெரியாத இதுபோன்ற முன்கோபக்காரர் உடன் என்னால் நிச்சயம் வாழ முடியாது. இந்த திருமணம் எனக்கு வேண்டாம்.' என்று கூறி திருமணத்தை நிறுத்தி இருக்கின்றார்.
உறவினர்கள் பலரும் மணமகன் குடிபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்து விட்டது என்று சமாதானம் செய்ய முயன்று இருக்கின்றனர். ஆனால் எதையும் ஏற்காத மணமகள் அங்கிருந்து சென்று விட்டார்.
English Summary
marriage girl shock and stopped the marriage