தாலிகட்ட நேரமாச்சு மாப்பிள்ளை எங்கே.?! இறுதி நேரத்தில் டிவிஸ்ட்டோடு எண்ட்ரீ.!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது மண்டபத்தில் அனைவரும் தயாராக இருந்த போது மணமகனை குதிரையில் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மண்டபத்திற்கு மணமகன் வந்துசேரவேண்டிய நிலையில் மணமகன் வராததால் திருமண வீட்டார் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.  

தாலி கட்டும் நேரம் நெருங்கிவிட்டதால் பெண் வீட்டாரும் பரபரப்பு அடைந்தனர். ஒருவருக்கொருவர் மணமகனை தொடர்புகொள்ள முயற்சித்தனர். அதற்குள் மண்டபத்தில் இருந்தவர்கள் காதல் விவகாரத்தில் மணமகன் எஸ்கேப் ஆகிவிட்டாரா என புரளியை கிளப்ப ஆரம்பித்தனர். 

பின்னர், தாலி கட்டுவதற்கு சற்று நேரம் முன்பு மண்டபத்தில் ஆஜரானார் மணமகன். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அப்போது உடன் இருந்தவர்களிடம் விசாரித்ததில், வரும் வழியில் சில பொதுமக்கள் தங்கள் ஊருக்கு மருத்துவக் கல்லூரி வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததாகவும், இதை பார்த்த மணமகன் மணக்கோலத்திலேயே போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறினார். 

பின்னர் அவரை சமாதானப்படுத்தி ஒருமணிநேரத்திற்க பின்னர் அழைத்து வந்தோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MARRIAGE BOY IN PROTEST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->