மத வழிபாட்டு தலத்தில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் - போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள மைஹர் மாவட்டத்தில் இந்து மத கடவுள் சாரதா மாதா வழிபாட்டு தலம் உள்ளது. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில், நேற்று இந்த கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோவில் வளாகத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கத்தியால் தன்னைத் தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது, கோவிலில் பணியுரியும் ஊழியர் ஒருவர் கோவில் வளாகத்தை சுற்றிவந்தபோது ஒருநபர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், தற்கொலை செய்துகொண்ட நபர் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த லாலாராம் என்பது தெரிவிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide temple in madhya pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->