மஹாராஷ்டிராவில் கொடூரம் - காரில் இறைச்சி கொண்டுச் சென்ற வாலிபர் அடித்துக் கொலை.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் கொடூரம் - காரில் இறைச்சி கொண்டுச் சென்ற வாலிபர் அடித்துக் கொலை.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் குர்லா பகுதியை சேர்ந்தவர்கள் அபான் அன்சாரி, நசீர் குரேஷி. இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை காரில் இறைச்சி கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து இந்த கார் நாசிக்கின் கவுதம்வாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த காரை 15 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. 

அவர்கள் காரில் மாட்டு இறைச்சியை கடத்துவதாக கூறி அன்சாரி மற்றும் குரேஷி மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரேஷி அளித்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களில் 11 பேரை கைது செய்தனர். 

இருப்பினும், காரில் கொண்டு சென்றது மாட்டு இறைச்சியா? அல்லது ஆட்டு இறைச்சியா? என்பது தெரியாததால், இறைச்சியை பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தில் ஒரு நபரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill for doubt kidnape beef in maharastra


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->