நாய் குரைத்ததால் ஆத்திரம் - தட்டிக்கேட்ட உரிமையாளர் அடித்துக் கொலை.!
man arrested for murder in madhya pradesh
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் அருகே முசகேடி பகுதியில் கடை நடத்தி வருபவர் சாகர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நாய் குரைத்துள்ளது. இதனால் பயந்துபோன சாகர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த நாயின் உரிமையாளரான 65 வயதுடைய மூதாட்டி, சாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சில நிமிடங்களில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சாகர் மூதாட்டியை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
இதனால், நிலைகுலைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸில் அளித்த புகாரின் படி போலீசார் சாகரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாய்க்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர் பரிதாபமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for murder in madhya pradesh