இளம்பெண்ணை கொலை செய்த தாய்மாமன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள, ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா மகள் தீபா. இவருக்கும், உறவினரான மால்தேஷ் என்பவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால், மால்தேஷை திருமணம் செய்வதில் தீபாவுக்கு விருப்பம் இல்லை. 

இது குறித்து அவர் மால்தேஷிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மால்தேஷ் "என்னை திருமணம் செய்தே ஆக வேண்டும்" என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில், தீபா வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில், தூக்கில் சடலமாகத் தொங்கினார். 

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தீபா மால்தேஷிடம் "எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கூறியதால் ஒப்புக்கொண்டேன். 

திருமணம் செய்தாலும், உன்னுடன் குடும்பம் நடத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மால்தேஷ் தீபாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மால்தேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for murder in karnataga


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->