கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகம்.! காதலி மற்றும் குழந்தைகளை கொன்று எரித்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகம்.! காதலி மற்றும் குழந்தைகளை கொன்று எரித்த நபர் கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கோந்துவா பகுதியை சேர்ந்த வைபவ் வாக்மாரே என்பவர் தனது காதலியான மைத்துனி அம்ரபாலி மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது அம்ரபாலிக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதில், ஆத்திரமடைந்த வாக்மாரே மைத்துனி மற்றும் அவரது குழந்தைகளையும் கொலை செய்து வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் துணிகளை போட்டு உடல்களை எரித்துள்ளார்.  

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்று உடல்களை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான வைபவ் வாக்மாரேவை தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் சம்பவம் குறித்து வீட்டில் சோதனை செய்தபோது குழந்தைகளின் நோட்டு புத்தகத்தில் வைபவின் செல்போன் நம்பர் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த செல்போன் என்னை வைத்து வைபவ் இருக்கும் இடத்தினை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வைபவ் ஹிண்டேவாடி சவுக் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதன் படி போலீசார் அந்த இடத்திற்குச் சென்று வைபவை கைது செய்த்தனர். 

இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பு சந்தேகத்தில் காதலியை கொலை செய்ததாகவும், சாட்சியங்களை அழிப்பதற்காக உடல்களை எரித்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arraested for kill girl friend with children in pune


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->