இளைஞரை நிர்வாணமாக நடக்க வைத்து டிக் டாக் செய்த கொடூரம்..! அதிரவைத்த வீடியோ காட்சி..!
man abused for tik tok
தற்போதைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி எல்லை மீறிய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரை குறையான ஆடைகளை அணிந்து கவர்ச்சியாக நடிப்பதும், நடனமாடுவதுமாக இருக்கின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரில் கல்லூரி ஒன்றில் படித்து வரும் இளைஞன் ஒருவர் மற்றுமொரு இளம்பெண் டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சி செய்த போது அந்த பெண்ணின் தந்தை பார்த்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த இளைஞனை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு, அவர் அந்த இளைஞரின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி அந்த இளைஞனின் முகத்தை ஒரு துணியால் மறைத்து வீதியில் தனது பெல்ட்டை வைத்து அடித்துச் சென்றுள்ளார். காயடைந்த அந்த இளைஞன் இது குறித்து அவரது வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் அந்த தந்தை மீதும் அவருடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அந்த மூவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.