காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த மம்தாவின் முயற்சி.! அதிரடி அசத்தல்.!!
mamtha banerji speech about global awareness
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவரின் வயது தற்போது 64 ஆகும் நிலையில்., இவரின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு தினம்தோறும் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை செய்து வருகிறார்.
இவரது வீட்டில் இருக்கும் நடக்கும் உடற்பயிற்சி இயந்திரத்தில் நடப்பது., தன்னை சந்திக்க வரும் அனைவரிடமும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிவுரைகளை வழங்குவது என அனைவரிடமும் பாசத்துடன் இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்.
இந்த தருணத்தில்., உலகம் முழுவதிலும் நேற்று சர்வதேச பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு தினமானது கடைபிடிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்விற்காக வங்காள தேசத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி., அங்குள்ள மலைப்பாதையில் 10 கிமீ தூரம் வரை ஜாகிங் செய்ய முடிவு செய்திருந்தார்.
இவரின் திட்டப்படி அங்குள்ள டார்ஜிலிங் பகுத்திடியில் இருந்து குர்ஸியான் மகாநதி பகுதி வரை நடந்து நடைப்பயிற்சி மேற்கொண்டார். இவர் நடந்து செல்லும் வழியெங்கும் மக்கள் நிற்க., அவர்களுக்கு பருவநிலை மாறுபாடுகளை விழிப்புணர்வாக கூறிக்கொண்டு சென்றார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும்., "நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு., நல்லதொரு ஆரோக்கியம் முக்கியமான ஒன்றாகும்., இது காலையில் எடுத்துக்கொள்ளும் உணவை போன்றது" என்று பதிவிட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
mamtha banerji speech about global awareness