5 மாநிலங்களிலும் வெற்றி தான்: மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கை! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் தேதியை அறிவித்தது. 

இதனை அடுத்து 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்திருப்பதாவது, '5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

5 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். 

மேலும் பா.ஜ.கவினர் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அசோக் கெலாட்டும், பூபேஷ் பாகேலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

இதனால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. சிவராஜ் சிங் சவுகான் காரணமாக எம்.பியில் பிரச்சனைகள் உள்ளதால் மக்கள் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். 

எனவே காங்கிரஸ் அரசு 5 மாநிலங்களிலும் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்' என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge says expect government all five states


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->