பேய் விரட்டுவதாக கூறி போலி மந்திரவாதியின் கொடூர கொலைகள்.. பதறிப்போன காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் இருக்கும் தானே மாவட்டத்தில், கல்யாண் பகுதியைச் சேர்ந்த பண்டரிநாத் என்ற 50 வயது முதியவர் தன்னுடைய 80 வயது தாயுடன் வசித்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள சுரேந்திர பாட்டில் என்ற மந்திரவாதியிடம் தனது தாயை அழைத்து சென்றுள்ளார். 

அங்கே அவர் பேயை விரட்டுவதாக கூறி தாய், மகன் இருவரையும் சரமாரியாக அடித்து இருக்கின்றார். இதனை அவரது குடும்பத்தினர் வேடிக்கை பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மந்திரவாதி சரமாரி தாக்கியதில் தாய் மகன் இருவரும் மயங்கி சரிந்து பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பேய் விரட்டுவதாக கூறி தாய், மகனை அடித்துக் கொலை செய்த மந்திரவாதி சுரேந்திர பாட்டில் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இறந்ததாக கூறி பண்டரிநாத் குடும்பத்தினரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இரட்டைக் கொலை குறித்த உண்மை தகவல்கள் வெளிவரும் என்று துணை போலீஸ் கமிஷனர் விவேக் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Thane Murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->