உணவு விவகாரத்தில் தகராறு: ஆத்திரத்தில் மகன் ஆவேச செயல்! துடிதுடித்து உயிரிழந்த தாய்!
Maharashtra son killed mother
தாணேவில் உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் தாயை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, தாணே மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று உணவு விவகாரத்தில் தாய்-மகன் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் சுவையான உணவை பரிமாறவில்லை என தெரிவித்து தாயின் கழுத்தை அரிவாளால் வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பாக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே சம்பவத்திற்கு பிறகு தாயை கொன்ற மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maharashtra son killed mother