மகன் கண் முன் மனைவிக்கு தீ வைத்த கணவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா லத்தூர் நீதிமன்றம், மகன் கண் முன் மனைவியை தீட்டு கொளுத்திய 40 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட கஜனன் ஏக்நாத் சாக்ரே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 302 மற்றும் 498 கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ. 500 அபராத தொகையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர் மகனின் கண் முன் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

40% தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவரது மனைவிக்கு தொடர்ந்து ஒரு மாதம் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த வழக்கில் 9 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரின் மகன் வழங்கிய சாட்சி அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Husband set fire his wife


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->