'டீ' கொடுக்காததால் ஆத்திரம்! அறுவை சிகிச்சையை பாதியில் விட்டுச் சென்ற மருத்துவர்!
Maharashtra doctor left operation halfway
மகாராஷ்டிரா மாநிலத்தில் டீ கொடுக்கவில்லை என்பதால் கோபமடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டு விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, நாக்பூர் மாவட்டத்தில் உள்ள மௌனப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நேற்று 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன் படி 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர், மருத்துவமனை ஊழியரிடம் டீ வேண்டும் என கேட்டுள்ளார்.
இந்நிலையில் டீ வர நீண்ட நேரம் ஆகியதால் ஆத்திரமடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றார்.
மேலும் 4 பெண்கள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தனர். திடீரென மருத்துவரின் இந்த செயலால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மாவட்ட மருத்துவ அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு வேறொரு மருத்துவர் வரவழைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையை பாதையில் விட்டு சென்ற மருத்துவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Maharashtra doctor left operation halfway