மத்தியப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்.! 3.6 ரிக்டர் பதிவு!
Madhya Pradesh earthquake
மத்திய பிரதேசத்தில் இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், சிங்ரௌலி பகுதியில் இன்று பிற்பகல் 2.33 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் செய்தும் குறித்தும் எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நேற்று, ஜம்மு காஷ்மீர் குப்வாரா பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Madhya Pradesh earthquake