திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து: பயணிகளின் கதி.? கேரளத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கேரளாவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளா, காயம்குளம்-ஆலப்புழா இடையே இயங்கி வந்த அரசு பேருந்து இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்தது தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. 

முன்னதாக பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala government bus caught fire 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->