கேரளாவில் மீண்டும் தொடங்கும் பா.ஜ.க 'ஸ்நேக யாத்திரை'!
Kerala BJP Sneha yatra
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் பா.ஜ.க காட்சி 'ஸ்நேக யாத்திரை' என்ற பெயரில் முன்னெடுப்பு ஒன்றை மீண்டும் தொடங்கியுள்ளது.
தொடக்கத்தில் கிறிஸ்துவ சமுதாயத்தை இலக்காக கொண்டு ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு அறிவித்தது. மேலும் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்நேக யாத்திரை தொடங்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க மாநில தலைவர் கே சுரேந்திரன் சில கிறிஸ்துவ மத குருக்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து முகநூலில் பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், பாஜகவுக்கும் மதயாலங்களுக்கும் இடையான மோதல் என்பது சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது.
எப்போதும் பா.ஜ.கவுக்கும் கிறிஸ்துவ மதாலயத்துக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.