கர்நாடகா சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்து‌‌.. 7 பேர் பலி.. 9 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக்கொண்டு சுற்றுலா பேருந்து ஒன்று உத்திர பிரதேச மாநிலம் அயோத்திக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது மோதிபூர் பகுதியில் உள்ள வணிக சந்தையில் நுழைந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பேருந்து ஓட்டுனர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து அங்கும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka picnic bus Accident 7 death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->