கரோனா உறுதியான கர்ப்பிணி பெண்ணிற்கு கடவுளின் இரட்டை செல்வங்கள்..!!
Karnataka girl delivery twin child positive corona under treatment in hospital
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டத்தை சார்ந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில், இந்த பெண்ணிற்கு கொரோனா அறிகுறியானது தென்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இந்த பெண்மணியை மருத்துவர்கள் மிகுந்த முக்கியத்துவம் பார்த்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த நிலையில், சுகப்பரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிரிந்துள்ளனர். இதில் ஒரு குழந்தை 2 கிலோ எடையும், மற்றொரு குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையுடன் இருந்துள்ளது.
பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், குழந்தைகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka girl delivery twin child positive corona under treatment in hospital