மேம்பால தடுப்பு சுவரில் மோதி கொடூர விபத்து .! சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பேர் உடல் நசுங்கி பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில காவல் துறையினர் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று திருப்பதி சென்றனர். விசாரணை முடிந்து இன்று காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

அப்போது கார் சித்தூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தார்களில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இது குறித்து தகவலறிந்த சித்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka car accident sub inspector and 2 more dead


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->