பழிக்கு பழி கொலை?..! வீட்டில் இருந்து வெளியே சென்றவர் சரமாரி வெட்டிக்கொலை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் கோகாக் பகுதியை சார்ந்தவர் மஞ்சு சங்கர் (வயது 23). இவர் வாகனங்களை பழுது பார்க்கும் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் காணாததால், பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், அவர் எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கோகாக் அருகேயுள்ள மகாந்தேஷ் நகரில் வாலிபர் பலத்த வெட்டுக்காயத்துடன் பிணமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோகாக் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

விசாரணையில், வாலிபர் மாயமான மஞ்சு சங்கர் என்பது உறுதியாகவே, அவரை மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது உறுதியானது. மேலும், வேறொரு இடத்தில் கொலை செய்து உடலை மகாந்தேஷ் நகரில் வீசி சென்றதும் அம்பலமானது. 

மஞ்சு சங்கரை யார்? எதற்காக? கொலை செய்தனர் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு யாருடனும் முன் விரோதம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Belagavi Youngster Murdered by Stranger Gang Police Investigation 19 July 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->