சகோதரர் போல பழகிய பெண்ணிற்கு அரங்கேறிய சோகம்.. வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண்மணி.!
Karnataka Bangalore women murder by man police investigation reason
கர்நாடக மாநிலத்தில் உள்ள வித்யாரண்யபுரா நரசிபுரா பகுதியை சார்ந்தவர் கங்கம்மா (வயது 45). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், கங்கம்மாவின் வீட்டின் முதல் மாடியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில், கங்கம்மாவிற்கும் - சிவகுமாருக்கும் இடையே நல்ல விதமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். கடந்த 23 ஆம் தேதியன்று காலை நேரத்தில் பெங்களூரில் வசித்து வரும் கங்கம்மாவின் மகள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அந்த நேரத்தில், கங்கம்மாவிற்கு பதிலாக சிவகுமார் அலைபேசியை எடுத்து பேசிய நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் மாலை நேரத்தில் தாய்க்கு தொடர்பு கொள்கையில், அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபரை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், கங்கம்மா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து இன்று காலை தாயை நேரில் சந்திக்க வீட்டிற்கு சென்ற நிலையில், கங்கம்மா கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கங்கம்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள சிவகுமாரை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Bangalore women murder by man police investigation reason