நண்பனை நம்பி வந்த பெண்ணிற்கு பப்பிள் பதறவைக்கும் சம்பவம்..!
Karnataka Bangalore girl Cheated by Friend in Pub 19 Feb 2021
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் தனிசந்திரா பகுதியை சார்ந்தவர் ஜெனிபர். இவரது நண்பர் எரிக் சார்லஸ். இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை பப்பிற்கு சென்ற நிலையில், பெண்ணும் அங்குள்ள பப் பாருக்குள் சென்றுள்ளார்.
இதன்போது, பெண்மணியிடம் காதலை வெளிப்படுத்திய சார்லஸ், தனது காதலை ஏற்றுக்கொள்ளக்கூறி கோரிக்கை வைத்துள்ளார். மேலும், உடனடியாக திருமணம் செய்துகொள்வோம் என்றும் தொந்தரவு செய்துள்ளார்.
இதனைக்கேட்ட பெண்மணி தனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்றும், பெற்றோரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த சார்லஸ் பெண்ணிடம் கேட்ட நிலையில், அவர் தர மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற சார்லஸ் ஜெனீபரை தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து பெண்மணி சார்லஸின் மீது புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் தலைமறைவாக உள்ள சார்லஸை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Bangalore girl Cheated by Friend in Pub 19 Feb 2021