பாக். இராணுவம் அத்துமீறி தாக்குதல்.. இந்திய பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம்.!!
Jammu Poonch Indian Army man passed away case fire violent by Pakistan Army
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை துப்பாக்கி சூடு மற்றும் அங்குள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது ராக்கெட் குண்டு வீசுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் அவ்வப்போது தக்க பதிலடி வழங்கப்பட்டு வரும் நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கைப்படி ஏற்கனவே எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தயாராகி இருக்கின்றனர்.
பயங்கரவாதத்தை அப்பட்டமாக வளர்ந்துவிடும் பாக்கிஸ்தான், எல்லையின் ஒருபுறத்தில் பாதுகாப்பு படையினரை திசைதிருப்பி, மறுமுனையில் பயங்கரவாதிகளை அத்துமீறி ஊடுருவ உறுதி செய்து வருகிறது.
தற்போதைய ஆகஸ்ட் மாதத்தில் ஏற்கெனவே பல இந்திய பண்டிகைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை மற்றும் ஐ.நா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இந்த நிலையில், எல்லையில் ரஜோரி பூன்ச் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரோஹின் குமார் படுகாயத்துடன் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Jammu Poonch Indian Army man passed away case fire violent by Pakistan Army