2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை... இந்திய இராணுவம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சோபியான் மாவட்டம் குடபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். 

அப்பகுதியை முற்றிலும் தங்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வந்து சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தீடீரென துப்பாக்கியால் சுட்டனர். 

இதனைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தவே, இருதரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Shopian district 2 Terrorist Encounter by Indian Army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->